AD

பட வாய்ப்புக்காக தனக்கும் பாலியல் சீண்டல் - வரலட்சுமியின் அதிரடி பேட்டி

பெண்களுக்கெதிரான பாலியல் சீண்டல் எல்லா துறைகளிலும் உள்ளது. சினிமாவில் இது சற்று அதிகமாகவே உள்ளது. சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை பாலியல் இச்சைக்கு உட்படுத்துவது அதிகம்.

சமீபத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை  நடிகைகள் சொல்ல ஆரம்பித்த நிலையில் தமிழில் பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரும், தான் இது போன்ற பிரச்னையை சந்தித்ததாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதில் அவர் தெரிவித்ததாவது,

தான் ஒரு வாரிசு நடிகை என தெரிந்தும் கூட தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர். தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட் செய்யும் படி சிலர் என்னிடம் கூறினர். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டேன். அப்படி பேசியவர்களின் ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. எல்லாம் நடந்த முடிந்த பிறகு பெண்கள் புகார் தெரிவிப்பது ஏற்க முடியாது. பெண்கள் தங்களை பாதுகாக்க தயார் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நடிகையாக மட்டுமல்லாது சமூகம் சார்ந்த விஷயங்களுக்கும், பெண்கள் நல பாதுகாப்பிற்கும் குரல் கொடுப்பவர் நடிகை வரலட்சுமி. பெண்கள் பாதுகாப்புக்காக சேவ் சக்தி என்ற அமைப்பையும் இவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.