AD

நயனுடன் நடிக்க ஒப்புக்கொண்ட பிரபல நடிகை

தமிழ், தெலுங்கு சினிமா உலகில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் இவர் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக நயன்தாராவும் நடிக்கவுள்ளார். 

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது குறித்து நடிகை சமந்தா அவர்கள் சமீபத்தில் பேட்டியொன்று அளித்திருந்தார்.அதில் அவர் கூறியதாவது,

என்னிடம் விக்னேஷ் சிவன் கதை சொல்லிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்ததனால் தான் நான் ஒத்துக் கொண்டேன். அதே போல் இந்த  படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடிப்பதில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இவர்களுடன் என்னுடைய திறமையை வெளிப்படுத்த முடியும் என்பதற்காகத் தான் இந்தப் படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டேன் என்று சமந்தா தெரிவித்தது பெரும் வைரலாகியதில் சமந்தா ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.