AD

ஸ்ரீரெட்டிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த பிரபலம்

கடந்த ஆண்டு தெலுங்கு சினிமா உலகில் பிரபலமான முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய மக்களிடையே பிரபலமான நடிகையான ஸ்ரீரெட்டி. இவர் தெலுங்கு நடிகர் மட்டுமல்லாது தமிழில் ஸ்ரீகாந்த், ராலன்ஸ் துவங்கி இயக்குனர் முருகதாஸ் வரை என பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டை சாட்டினார்.

இந்நிலையில் இவருக்கு பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை  செய்ததாக பல நடிகர்கள் மீது குற்றச்சாட்டை எழுப்பினார். மேலும் அதற்காக “ரெட்டி லீக்ஸ்” என்ற போராட்டம் ஒன்றையும் உருவாக்கினார். அதுமட்டுமில்லாமல் இந்த போராட்டத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பல ஸ்ரீரெட்டி இடம் பகிர்ந்து கொண்டார்கள். 

தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள ஸ்ரீரெட்டி அடிக்கடி எதாவது சர்ச்சையான விஷயத்தை சமூகவலைத்தலங்களில்  பதிவிட்டு வருவார். சமீபத்தில் கூட தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மீது மூன்று திருமணங்கள் செய்தவர். இவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர் அரசியலுக்கு தகுதியானவர் இல்லை குற்றம் சாட்டியிருந்தார்.

நிலையில் தெலுங்கு நகைச்சுவை நடிகை கராத்தே கல்யாணி அவர்கள் நடிகை ஸ்ரீரெட்டி மீது தெலுங்கு வழக்கு நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குனர் ராகேஷ் ஆகியோர் மீது அவதூறாக சமூகவலைத்தலங்களில் பேசியுள்ளார் என சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதனை தொடர்ந்து நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குனர் ராகேஷ் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்துள்ளார்.

மேலும், அந்த புகாரில் ஸ்ரீரெட்டி எங்கள் இருவரையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியுள்ளதாக புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்கள். அத்துடன் ஸ்ரீரெட்டி பேசிய சில ஆபாச வீடியோவை ஸ்ரீரெட்டி காண்பித்துள்ளதையடுத்து சைபர் கிரைம் பொலிசார் ஸ்ரீரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிற நிலையில்  கூடிய விரைவில் ஸ்ரீரெட்டி கைது செய்யப்பட நிறைய வாய்ப்புக்கள் உள்ளது என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.