AD

இரவு பகல் பாராமல் ஜிம்மில் உழைத்த பிரபலம்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த சல்பேட்டா பரம்பரை  என்ற படத்திற்கான ஏற்பாடுகளில் நடிகர் ஆர்யா பெரிதும் தீவிரம் காட்டி வருகிறார் . அதனை உறுதிப்படுத்தும் விதமாக, வெகு தீவிரமாக உடற்பயிற்சி செய்து, தனது உடலை கட்டு கட்டாக மாற்றியிருக்கிறார். 

ஆகையால் ரஞ்சித்தின் படத்தில் வட சென்னையைச் சேர்ந்த பாக்ஸராக ஆர்யா நடிப்பார் என்று தெரிகிறது.அத்தோடு தனது வேர்க் அவுட் வீடியோவை வெளியிட்டு,  ரஞ்சித் சாரின் படத்திற்கு தயாராகி விட்டேன். விளையாட்டு மீதான என் காதல் உயிர் பெற்று திரையில் வரவிருக்கிறது. ரஞ்சித் சாரின் அடுத்தப் படத்தில் பாக்ஸர்களை எதிர் கொள்கிறேன். இந்தப் படம் எனது திரை வாழ்க்கையில் மிகவும் சவாலானது. அனுபவத்தை நேசிக்கிறேன். ரஞ்சித் சார் தனித்துவமானவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப் படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன், ஸ்டண்ட் இயக்குநராக அன்பு அறிவு பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திற்கு சல்பேட்டா பரம்பரை என்று பெயரிடப்பட்டதாக தகவல் வெளியான  நிலையில்   இந்த பெயர் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும்அத்தடன் இந்தத் திரைப்படம் ஆர்யாவின் 30- வது படமாகவிருக்கும் என்பது  குறிப்பிடத்தக்கது.