AD

விஜய் நடிப்பில் யாரும் எதிர்பாராத கூட்டணி

தமிழ் சினிமா உலகமே தற்போது எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது விஜய்யின் அடுத்தப் பட அறிவிப்பை பற்றி தான். இந்த முறை இதுவரை 10க்கும் மேற்பட்ட இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளார்  விஜய், இவர் இதுவரை  இப்படி கதை கேட்காதது  இந்த  எதிர்பார்ப்புக்கும் காரணம்.

வெற்றிமாறனில் தொடங்கி பாண்டிராஜ், சுதா கொங்கரா, மகிழ்திருமேனி, முருகதாஸ், சங்கர், கார்த்திக் நரேன், லோகேஷ் கனகராஜ், பேரரசு என பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. இந்த லிஸ்டிலுள்ள அனைவரிடமும் விஜய் கதை கேட்டது உண்மைதான்.

சன் பிக்சர்ஸ் தான் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கிறது என பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் தற்போது வரை சன்பிக்சர்ஸ் அதற்கான அறிவிப்பை வெளியிடாதநிலையில் பிரபல சன்டிவி தொகுப்பாளர் சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய்யின் 65வது படமும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார் எனவும் அதற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதில் மிகப் பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், எஸ் ஆர் பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார் என்பதுதான்.

மேலுமு் கைதி படத்தின்போது தளபதி விஜய் ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ் ஆர் பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார்கள் என தளபதி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தும் இது உண்மையா அல்லது பொய்யான செய்தியா என தளபதி 65 படத்தின் உண்மையான அறிவிப்பு வெளிவந்த பிறகு தான் தெரிந்துகொள்ள முடியும்.