AD

இணையத்தில் லீக்கான மாஸ்டர் படப்பிடிப்பு

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். அதனால் தான் படத்திற்கு மாஸ்டர் என்று தலைப்பு வைத்ததாக கூறப்படுகிறது. 

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இதனாலே படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளதுள்ள நிலையில் 

இந்த படத்தில் இவர்களுடன் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ ப்ரேம், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் குட்டி கதை பாடல் வெளியாகி சமூகவலைத்தளங்களில்  பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது. 

மேலும், அடுத்த மாதம் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகன். இவர் தமிழ் மட்டும் இன்றி கிந்தி, மலையாளம், கன்னட ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் நடித்திருந்தார். இரண்டாவது தளபதி விஜய்யுடன் நடித்து வருகிறார். 

இதனாலே மற்ற நடிகைகளுக்கு ஒரு பொறாமை என்று கூட சொல்லலாம். அடுத்ததாக இவர் சூர்யா படத்தில் இணையும் வாய்ப்பு அதிகமாகமுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகன் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.

இந் நிலையில் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கல்லூரி மாணவியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளதனைத் தொடர்ந்து இவர் கல்லூரி மாணவியாக நடிக்கும் காட்சி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. 

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது பல கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இருந்தாலும் எப்படியோ ரசிகர்கள் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர். இதனால் படக்குழுவினர் சோகத்தில் உள்ளார்கள். இந்த மாதிரி புகை படங்கள் வெளிவருவதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு குறைகிறது என்று கூறப்படுகிறது.