AD

ஜெயலலிதா படத்தில் வெளியான திடீர் திருப்பம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை, பற்றி வெகுவிமர்சையாக தலைவி என்ற பெயரில்  திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ், கிந்தி உள்பட 5 மொழிகளில் பிரமாண்டாக தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தை  ஏ.எல்.விஜய் இயக்குகிறார். ஜெயலலிதா வேடத்தில் கங்கணா ரணவத்தும், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும், ஆர்.எம்.வீரப்பான சமுத்திரகனியும் நடிக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா கேரக்டரில் பிரியாமணி நடிப்பதாக இருந்தது நிலையில் தற்போது  அவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து அசுரன் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சுவாரியார் நடித்த கேரக்டரிலும், இந்தியில் மைதான் படத்திலும் பிரியாமணி நடிப்பதால் தலைவி படத்திற்கு அவரால் தேதி ஒதுக்க முடியவில்லை. அதனால் அவர் விலகி விட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்ற நிலையில் தற்போது சசிகலா கேரக்டரில் பூர்ணா நடிக்க இருக்கிறார்.

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது தவிர எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் கேரக்டரில் மதுபாலா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தலைவி படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.