AD

இந்திய திரையுலகமும் சோகத்தில் ஆழ்ந்த பிரபலத்தின் நினைவு தினம்

தனது நடிப்பாலும் ,அழகாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இந்திய சினிமாவின் பிரபல நடிகை  ஸ்ரீதேவி  இவர் தனது நான்கு வயதில் துனைவன் என்ற பக்தி படத்தில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பணியாற்றி பின்னர், தனது கடின உழைப்பால் வெற்றி பெற்று பாலிவுட்டின் லேடி அமிதாப் என்ற பெயரைப் பெற்றார்.

2018-ல்  துபாயிலுள்ள தனது ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக செய்திகள் வந்த நிலையில் இன்றும் அவரின் இறப்பிற்க்கான காரணம் சரியாக தெரிவிக்கப்படவில்லை. இந்ந சம்பவமட இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்திய நிலையில் தற்போது தனது அம்மாவின் இரண்டாவது நினைவு ஆண்டு விழாவில், ஜான்வி கபூர் அம்மாவுடன் இருக்கும் தனது குழந்தை பருவப் படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “ தினமும் உங்களை மிஸ் செய்கிறேன் ” என்று குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகரடகள் அனைவரும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்துவருகின்றனர் .