AD

வனிதா எடுத்த புகைப்படம் - கமன்ட்டில் திட்டும் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3  போட்டியில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முகென் முதலிடத்தையும் கொண்ட சாண்டி இரண்டாவது இடத்தையும் பெற்றிருந்த அதேவேளை மூன்றாவது இடத்தை லொஸ்லியாவும் பெற்றிருந்தனர். 

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான சில போட்டியாளராக விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா.

இவ் நிகழ்ச்சி பிரபலமானதற்கு ஒருவிதத்தில் ஒன்று கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் மற்றொன்று வனிதாவும் காரணம் என்று சொல்லலாம். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் அடிக்கடி விஜய் டிவிக்கு விஜயம் கொடுத்து வந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார். 

இந் நிலையில் வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேரனுடன் இருக்கும் புகைப்படமொன்றை பதிவிட்டு, நீண்ட இடைவேளைக்கு பின் என் அண்ணாவை சந்தித்தேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த  பலரும் இவருடன் ஏன் புகைப்படத்தை எடுத்து போடுகிறீர்கள் என்று கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்ற நிலையில் இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.