AD

திருமணம் குறித்து பேசிய அனுஷ்கா

தென்னிந்திய சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வரும் நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு படத்தின் மூலும் சினிமா உலகில் அறிமுகமானார்.  பின்னர் பல வெற்றிப்படங்களை தகதாக்கி கொண்டார்.

சில ஆண்டுகளாகவே அனுஷ்காவுக்கும், தெலுங்கு நடிகர் பிரபாஸ்ஸுக்கும் காதல் என்று சமூக வலைத்தளங்களில் பல கிசுகிசுக்கள் வந்ததையடுத்து  இருவரும் அந்த காதலை இல்லை என மறுத்து விட்டார்கள். பின் அனுஷ்கா ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் வந்தது. ஆனால், அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை

தற்போது நடிகை அனுஷ்கா அவர்கள்  வட இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் என்றும் அவர்  ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகிறார் அவரையே அனுஷ்கா காதலிப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. , வீரர் அணி ஒன்றுக்காக என்றும் கூறப்பட்டது.

 இது குறித்து அனுஷ்காவிடம் கேட்ட போது அவர் கூறியது,

காதல், திருமணம் என்றாலே என்னைப் பற்றி கிசுகிசுக்கள் தான் சமூக வலைத்தளங்களில் எப்போதும் வரும். இது வழக்கமான ஒன்றாக வைத்து விட்டார்கள். பல தடவை எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். பல பேருடன் என்னை இணைத்து பேசியுள்ளார்கள். ஒரு தொழிலதிபரை விரும்புகிறேன், டாக்டரை விரும்புகிறேன் என்றும், என்னுடன் நடித்த நடிகர்களுடன் இணைத்தும் பேசினார்கள்.

இப்போது கிரிக்கெட் வீரரை காதலிக்கிறேன் என்று கூறுகிறார்கள். எதுவும் உண்மை இல்லை. என்னை ஏன் இப்படி குறி வைக்கிறார்கள் என்று தெரியலை.  நடிகைகள் பற்றி வதந்திகள் வருவது சாதாரணமான ஒன்று தான். எனது திருமண முடிவை நான் என் பெற்றோர்களிடம் விட்டுவிட்டேன். அவர்கள் யாரைப் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்களோ அவர் தாலி கட்ட கழுத்தை நீட்டுவேன் என்று தெளிவாக அனுஷ்கா கூறியிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகிவருகிறது.