AD

இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணம் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை

உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக  அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா சரண்.  சில வருடங்களாக இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என தெரியாமலிருந்த நிலையில் திடிரென்று ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை கடந்த 2018 ஆம் மும்பையில் திருமணம்  செய்துகொண்டார். 

திருமணத்திற்கு பின்னர் தனது காதல் கணவருடன் ரஷ்யாவில் செட்டில் ஆகிவிட்டார். இதனால் நடிகை ஷ்ரேயா தொடர்ந்து நடிப்பாரா மாட்டாரா என்று ரசிகர்கள் சந்தேகித்து வந்தனர். ஆனால், தற்போது தெலுங்கில் இரண்டு படத்திலும், தமிழில் நரகாசரன்  என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர்  அடிக்கடி தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வந்த போதும்  திருமணம் முடிந்து 2 வருடங்கள் கழித்து இப்போதே தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரத்திலேயே ஆயிர கணக்கில் லைக்ஸ்களை குவித்துள்ளது.