AD

லைக்காவின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகிறது தர்பார்

லைக்கா புரொடக்சனின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சூப்பர்ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையமைக்க  உருவாகியுள்ள ‘தர்பார் ’ திரைப்படம் நாளை உலகளாவிய ரீதியில் வெளியாகவுள்ளது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் சுனில் ஷெட்டி, யோகி பாபு, ப்ரதீக் பார்பர், நிவேதா தோமஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரஜினிகாந்த் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் பொலிஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருப்பதால், இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தர்பார் உலகம் முழுவதிலும் சுமார் 7 000 திரையரங்குகளிலும், இந்தியாவில் மட்டும் 4 000 திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் இன்று இரவு ஈஸ்ற்ஹாம் (Boleyn Cinema) போலியன் திரையரங்கில் 10.30 க்கு முதல் காட்சி காண்பிக்கப்படவுள்ளதோடு தமிழகத்தில் நாளை காலை 4.30 க்கு முதல் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.