AD

இளைஞர்கள் தான் இறங்கி வேலை செய்ய வேண்டும் – கார்த்தி

எவ்வளவு உழைத்தாலும் விவசாயத்தை விட்டு விடக் கூடாது என்பதற்காக சென்னைக்கு அருகிலேயே விவசாயம் செய்ய இடம் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கவுண்டம் பாளையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இனிமேல் இளைஞர்கள் தான் இறங்கி வேலை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது யார் என்று பார்த்தால் கல்லூரி இளைஞர்கள் தான் எனக் கூறினார். அத்துடன் சிஏஏக்குப் (குடியுரிமை திருத்தச் சட்டம்) போராடிக் கொண்டிருப்பதும் நம் கல்லூரி மாணவர்கள் தாம். அடுத்தத் தலைமுறை தான் விவசாயத்தையும் தண்ணீரையும் பாதுகாக்க வேண்டும் என்றும்  கூறியுள்ளார்.