AD

கமலுக்கு எதிராக களமிறங்கியுள்ள கௌதமி

கமல்ஹாசனின் துணைவியாக பத்து வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்தவரும் அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்தவர் கௌதமி. 

இவர் சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக கமலிடமிருந்து  பிரிந்தார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்கிய இவருக்கு  பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அரசியல் பக்கம் கவனத்தை திருப்பியவர் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் கமலுக்கு எதிராக அரசியலில் நடிகை கௌதமியை பா.ஜ.க. களம் இறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பிரதமர் மோடியை கௌதமி சந்தித்து பேசிய இவர் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய கையோடு ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பேட்டியளித்து பரபரப்பு ஏற்படுத்தினார். பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.


இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் பா.ஜனதா சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கௌதமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக பா.ஜனதா வேட்பாளர் தேர்விலும் கௌதமிக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக கௌதமி களமிறங்கியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த புரிதல் இல்லாமல் சிலர் எதிர்ப்பதாக கூறியுள்ளார். கௌதமி கூறிய அந்த சிலரில் நடிகர் கமல்ஹாசனும் அடங்குவார். அந்த சட்டத்திற்கு எதிராக கமலின் மக்கள் நீதி மய்யம் உச்சநீதிமன்றம் வரை சென்றது.

இந்த நிலையில்தான் கமலுக்கு எதிராகவே கௌதமி பேசியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசியல் விமர்சகர்களும் கூட கௌதமி பேசிய வி‌டயம் பொதுவாக இருந்தாலும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் கமலை சீண்டக்கூடிய வகையில் இருக்கிறது என்கிறார்கள்.

பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சிக்கும் கமலை விமர்சிக்க கௌதமியை அந்த கட்சி களம் இறக்கியுள்ளதாக சொல்கிறார்கள். விரைவில் கௌதமிக்கு பா.ஜனதா செய்தி தொடர்பாளர் பதவி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.