AD

என்கவுண்டர் குறித்து பிரபல நடிகை பரபரப்பு அறிக்கை

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துக் கொலை செய்த நால்வரை நேற்று தெலுங்கானா பொலிஸார் என்கவுன்டர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில் இது குறித்து நடிகை நயன்தாரா தன்னுடைய கருத்தஅறிக்கை ஒன்றின் மூலம் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று உண்மையான நாயகர்களால் இன்று உண்மையாகியிருக்கிறது. தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.