AD

சசிகலா வேடத்தில் தேசிய விருது பெற்ற நடிகை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சுயசரிதையை மையமாக வைத்து புதிய படங்கள் உருவாகி வருகிறது. அதில் முக்கியமானதாக தலைவி படம் அமைந்துள்ளது. தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் பருத்திவீரன் புகழ் பிரியாமணி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான தோழியாக அவருக்கு உதவியாக ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை கூடவே இருந்தவர் சசிகலா. இந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று தலைவி படக்குழு தீவிரமாக ஆலோசித்த நிலையில் தற்போது பருத்தி வீரனில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகையான பிரியாமணி சசிகலா வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என படக்குழு முடிவு செய்துள்ளது.

இதனிடையே மக்கள் திலகம் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் வேடத்திற்கு நடிகர் அரவிந்த சாமி நடிக்கின்றார். விரைவில் படப்பிடிப்பு நடக்கும் என தெரிகிறது.