AD

சுஜித் மீண்டு வர வேண்டும் - விவேக் உருக்கம்

சுஜித் மீண்டு வர வேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே - இவ்வாறு தெரிவித்துள்ளார் நடிகர் விவேக்.

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரிட்டோ - கலாமேரி தம்பதியரின் இரண்டு வயது மகன் சுஜித் வில்சன்,  சரியாக மூடப்படாமல் இருந்த ஆழ்துழை கிணற்றில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தையை மீட்க, மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். நாடு முழுவதும் சுஜித் நலமாக மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனைகள் நடக்கின்றன. 

இந்த நிலையில் நடிகர் விவேக் டுவிட்டரில், ‛‛சுஜித் மீண்டு வர வேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்ரதை, அலட்சியம், இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. 

இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு'' என பதிவிட்டுள்ளார்.