பிரகாஷ்ராஜ் மீது முறைப்பாடு
நடிகர் பிரகாஷ்ராஜ் மீது டில்லி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசிய குற்றச்சாட்டிலேயே அவர்மீது முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனியார் சேனல் ஒன்றில் நடிகர் பிரகாஷ்ராஜ், ராம்லீலா குறித்து பேசும்போது, அதனை குழந்தை ஆபாசத்துடன் ஒப்பிட்டு பேசியதாகவும் , சிறுபான்மையினர் இடையே அச்சத்தை பரப்புகிறது எனக் கூறியதாக சர்ச்சை எழுந்தது.
இது குறித்த காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனையடுத்து, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக பிரகாஷ்ராஜ் மீது டில்லி திலக் மார்க் என்பவர் முறைப்பாடு செய்துள்ளார்.
Post a Comment