இன்னும் 72 மணி நேரத்தில் இந்தியாவில் - ராணா டகுபட்டி
இன்னும் 72 மணி நேரத்தில் இந்தியா திரும்புவேன் - இவ்வாறு தெரிவித்துள்ளார் 'பாகுபலி' வில்லன் ராணா டகுபட்டி,
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணா அமெரிக்கா சென்றிருந்தார். அவருக்கு உடல்நலம் பாதிப்பு என்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறப் போவதாகவும் செய்திகள் வெளிவர, அவற்றை உடனடியாக மறுத்தார் ராணா.
இதனிடையே, இன்ஸ்டாகிராமில் இரு தினங்களுக்கு முன்பு ஒரு விளம்பரப் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் ராணா. அதில் அவர் உடல் மிகவும் இளைத்து, சோர்வாக காணப்பட்டார். இதனால் இரசிகர்கள் பலரும் என்ன ஆயிற்று என அவருக்கு கேள்விகளைக் கேட்டார்கள். அவை எதற்கும் ராணா பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்பு ஒரு புதிய புகைப்படத்தைப் பதிவிட்டு, “இன்னும் 72 மணி நேரத்தில் இந்தியா திரும்புவேன்” எனக் கூறியுள்ளார்.
Post a Comment