AD

பாடிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்த பாடகர்

விநாயகரைப் போற்றி எழுதப்பட்ட பாடல்களை பாடிக் கொண்டிருந்தபோதே    சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார் பாடகர் ஒருவர்.

கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் கொங்கனி இசையமைப்பாளரும்; பாடகருமான ஜெர்ரி பஜ்ஜோடியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், சினிமா பாடல்கள் தவிர, பக்திப் பாடல்களையும்  மேடைகளில் பாடுவார். இவரது பாடலைக் கேட்க, இவர் எங்கு மேடை போட்டுப் பாடினாலும், ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு வருவர்.

மங்களூரில் கடந்த செவ்வாயன்று, விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, பேஜாய் என்ற இடத்தில், மேடையில் பாடிக்கொண்டிருந்த அவர் திடீரென சரிந்து வீழ்ந்துள்ளார்.

உடனே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், பார்வையாளர்கள் சிலரும் சேர்ந்து, ஜெர்ரி பஜ்ஜோடியை உடனடியாக  மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர், இறந்து போய் விட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், அவரது குடும்பத்தினரும்  ரசிகர்களும் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர்.