AD

விருதுக்குத் தேர்வான பரியேறும் பெருமாள்

சிறந்த படம் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ‛பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சுவாமி சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கி கௌரவிக்கிறார் முதல்வர் நாராயணசாமி.

இப்படம் தமிழில் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது.

புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் நடத்திவரும் இந்த விழா நாளை மறுநாள்  13 ஆம் திகதி மாலை 6 மணிக்கு தட்டாஞ்சாவடி முருகா திரையரங்கில் இடம்பெறவுள்ளது.

விழாவில் நகர்கீர்த்தன் (பெங்காலி), சூடானி ப்ரம் நைஜீரியா (மலையாளம்), மகாநடி (தெலுங்கு), ராஷி (இந்தி) ஆகிய படங்கள் சிறப்புத் திரைப்படங்களாக திரையிடப்படுகிறது. 

வரும் 17 ஆம் திகதி வரை இந்தத் திரைப்பட விழா நடக்கவிருக்கிறது.