AD

மீண்டும் வந்த ரித்திகா

இரண்டு வருடங்களாக தமிழ் சினிமா பக்கம் வரதாத  ரித்திகா  இப்போதுதான் மீண்டும் வந்திருக்கிறார்.

இறுதிச் சுற்று படத்தில் நிஜ பாக்சரான ரித்திகா சிங் கதாநாயகியாக அறிமுகமானார்.  படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறப்பு நடுவர் தேசிய விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

அதற்குப் பிறகு தமிழில் 'ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா' ஆகிய படங்களில் மட்டும் நடித்தார். அவை இரண்டுமே சரியாகப் போகவில்லை. 

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 'ஓ மை கடவுளே' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 

இன்று அப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்களை மாதவன், ஜெயம் ரவி, அனிருத் ஆகியோர் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்கள்.