சர்வராக வேலை பார்த்த ஹீரோ
பணத் தேவைக்காக தனது நண்பர் நடத்தி வந்த ஓட்டலில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார். கனா காணும் காலங்கள் தொலைக்காட்சி தொடர் நடிகர் இர்பான்.
கனா காணும் காலங்கள் என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் நடிகர் ஆனவர் இர்பான். பின்னர். சரவணன் மீனாட்சி தொடரின் 2 ஆவது சீசனிலும் நடித்தார். பின் சினிமாவுக்கு வந்தார்.
பட்டாளம், சுண்டாட்டம், பொங்கி எழு மனோகரா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். அதன்பின் பெரியதாக வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து விலகினார்.
இந்தக் கட்டத்தில் இவர் தனது பணத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தனது நண்பர் நடத்தி வந்த ஓட்டலில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார்.
அவரை மக்கள் அடையாளம் கண்டு கொண்டு பேசவே அந்த வேலையை விட்டு விட்டு மீண்டும் நடிக்கும் ஆசையில் வெப் சீரிஸ் தொடங்கியுள்ளார்.
Post a Comment