AD

முடித்துக் காட்டுவேன் - சிவா

நான் தோல்வி அடைந்தால் என்னை கை தூக்கிவிட ரசிகர்கள் இருக்கிறார்கள்-இவ்வாறு சொல்லிப் பெருமைப்படுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் நம்ம வீட்டு பிள்ளை.  இமான் இசையில் அமைக்கப்பட்ட இப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.  இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிவா இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

மெரீனா படத்தின் மூலம் என்னை ஹீரோவாக்கியவர் பாண்டிராஜ். அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா மூலம் கமர்ஷியல் ஹீரோவாக்கினார். தற்போது மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறோம். பாரதிராஜா, சமுத்திரகனி போன்ற ஜாம்பவான்களோடு நடிப்பது மகிழ்ச்சி.

சின்ன வயதிலிருந்தே முடியாது, வராது என்ற வார்த்தைகளைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். "நீ பிளஸ் 2 பாசாக முடியாது" என்றார்கள், பாசானேன். டி.விக்கு போகிறேன் என்றேன். "அதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது" என்றார்கள். போனேன், ஜெயித்தேன். "டி.வியிலிருந்து சினிமாவுக்கு சென்றால் தேற மாட்டேன்" என்றார்கள். சினிமாவுக்கு வந்தேன். தேறினேன். 

நான் தோல்வி அடைந்தால் என்னை கை தூக்கிவிட ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் முடியாது, எனக்கு வராது என்று சொல்லிக் கொண்டே இருங்கள். அப்போதுதான் அதை சவாலாக எடுத்துக் கொண்டு என்னால் ஜெயிக்க முடியும்-என்றார்.