AD

காப்பான் எனக்காக அல்ல சூர்யா

காப்பான் எனக்காக உருவாக்கப்பட்டது அல்ல -இவ்வாறு சொல்கிறார் நடிகர் சூர்யா.

சமீபத்தில் அவரிடம் நடத்தப்பட்ட பேட்டி ஒன்றின்போதே சூர்யா இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

காப்பான் எனக்காக உருவாக்கப்பட்டது அல்ல. 2012 இல் வேறு ஒரு முன்னணி ஹீரோவுக்காக உருவாக்கப்பட்ட இந்த கதையில் அவரால் நடிக்க முடியாமல் போனது. ஆனால் அந்த கதை கால ஓட்டத்தில் நான் நடிக்கும்படியாக என்னை தேடி வந்தது. 

அது மட்டுமல்ல இந்தப் படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்து இருக்கிறார் அல்லவா. அதுகூட இன்னொரு நடிகர் நடிப்பதாக இருந்த கதாபாத்திரம் தான். 

ஆனாலும் எந்தவித மறு யோசனையும் இல்லாமல் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு ஆர்யா நடித்துள்ளார் - என்றார்.

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் ,இயக்கத்தில், உருவாகியுள்ள காப்பான், வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி வெளியாகவிருக்கிறது. 

மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், சமுத்திரகனி இன்னும் சில பாலிவுட் நடிகர்கள் என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.