AD

ராதா மோகனுடன் சூர்யா

ராதா மோகன் இயக்கத்தில், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னையில்  ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவு ள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிடவுள்ளனர்.

தற்போது எஸ்.ஜே.சூர்யா உயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இரவாக்காலம் மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராகவுள்ளன.