AD

விஷால் படப்பிடிப்பு ஆரம்பம்

சுந்தர் சி இயக்கத்தில் 'ஆக்ஷன்' படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஷால். இதற்கடுத்து அவர் நடிக்கும் 28 ஆவது படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பும் ஆரம்பித்துள்ளது. 

இதில், விஷால் ஜோடியாக ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்கள். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படப்பிடிப்பு நேற்று  கோயம்பத்தூரில் ஆரம்பமானது. படத்தை அறிமுக இயக்குநர் ஆனந்த் இயக்குகிறார். முதலில்   'இரும்புத் திரை 2' என்ற பெயரைச் சொன்னார்கள். ஆனால், அது இன்னும் உறுதியாகவில்லை.

தற்போது கோவையில் ஆரம்பமாகியுள்ள படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெற உள்ளதாம். ஏற்கெனவே முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் 15 நாள்கள் நடத்தி விட்டார்கள். பின் மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளதாம்.

இப் படத்திற்குப் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன் 2' படத்தில் விஷால் நடிக்கவுள்ளார்.