AD

கீர்த்தி சுரேஷின் படப்பிடிப்பு ஆரம்பம்

நாயகியை மையமாகக் கொண்ட படமொன்றில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ் . அவருடன் புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ஞ் நிறுவனத்துடன் இணைந்து, கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நேற்று ஆரம்பித்தது. 20 நாள்கள் வரை அங்கு படப்பிடிப்பு நடக்கிறது. 2 ஆம் கட்டப் படப்பிடிப்புகள் சென்னையில் நடக்கிறது. 

குறுகிய காலத்தில் இதன் பணிகளை முடித்து வரும் ஜனவரி மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறது படக்குழு. எனினும் படத்திற்கு டைட்டில் முடிவாகவில்லை. மேயாதமான், மெர்குரி படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ஞ் நிறுவனம் தயாரிக்கும் 3 ஆவது படம் இது.