AD

விருது கிடைக்காத ராட்சசன்

தேசிய விருது மற்றும் சைமா விருது பட்டியலில் ராட்சசன் படத்திற்கு  விருது கூட கிடைக்காததால் ரசிகர்கள் தமது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

விருதுக்குத் தேர்வு செய்யும் முறை சரியில்லை; ஜூரிகள் ஒரு தலைபட்சமாக நடக்கின்றனர் என்றெல்லாம்,  கடுமையாக விமர்சித்தும் வந்தனர்.

 பேரண்பு படத்திற்கும் விருது வழங்கப்படவில்லை என, மம்முட்டியின் இரசிகர்கள் கடுமையாக விமர்சித்ததோடு,  படங்களை தேர்வு செய்யும்  தலைவருக்கு, கடுமையான சொற்களைக் கொண்டு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி வந்தனர்.

இதையடுத்து, அவர், நடிகர் மம்முட்டியிடம் பிரச்னையைக் கொண்டு சென்றதோடு, மண்டல அளவிலேயே பேரண்பு படம் தேர்வாகி, தேசிய விருதுக்கான இறுதிகட்ட தேர்வுக்கே வரவில்லை எனக் கூறியதையடுத்து, நடிகர் மம்முட்டி, கமிட்டி தலைவரிடம் மன்னிப்புக் கோரினார்.

இதுவேதான் ராட்சசன் பட விவகாரத்திலும் நடந்திருக்கிறது. விருதுக்குப் படம் தேர்வாகவில்லை என ரசிகர்களெல்லாம் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்க, ராட்சசன் திரைப்படம் எந்த ஒரு விருதுக்கும் அனுப்பப்படவில்லை

மக்கள், இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கியதே எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய விருது என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்ததையடுத்து,
அவரது இரசிகர்கள் ரொம்பவும் குழம்பிப் போய் இருக்கின்றனர்.