AD

ஒத்த செருப்பால் உயர்ந்தவர்

பார்த்திபன் தானே எழுதி, இயக்கி அவரே நடித்துள்ள படம் ஒத்த செருப்பு  ஆசிய புக் ஆப் ரிக்கார்டில் இடம் பெற்றுள்ளது. 

இதற்கான சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பாரதிராஜா தெரிவித்ததாவது,

படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் என்னைப் பேச அழைக்காதீர்கள் படத்தைப்பற்றி நான் நீண்ட கடிதம் ஒன்றை உங்களுக்கு பிறகு எழுதுகிறேன் 

காரணம் இன்னமும் என்னால் படத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை. தனி ஒரு ஆள் மட்டும் கால் மணி நேரமோ அரை மணி நேரமோ திரையில் தோன்றி நடிக்கலாம். 

ஆனால் சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் முழு படத்திலும் தோன்றுவதெல்லாம் விளையாட்டு விடயமில்லை. அதையும் மிக அற்புதமாக செய்திருக்கிறார் பார்த்திபன். 

புதிய பாதையில் தன்னை நிரூபித்த பார்த்திபன் இன்று நடிப்பில் புதிய பரிமாணங்களைத் தொட்டிருக்கிறார். உனக்கு உரிய உயரத்தை நீ இன்னும் அடையவில்லை என்று நான் பார்த்திபனிடம் அடிக்கடி சொல்வேன். 

ஒற்றை செருப்பு படம் மூலம் உலகத்தையே தமிழ்ப்படங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் பார்த்திபன்-என்றார்.