AD

மீண்டும் உள்நுளைந்த பிரஷாந்த்

சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தவர் நடிகர் பிரஷாந்த். இவர் தற்போது மீண்டும்  சினிமாவில் களமிறங்கியுள்ளார். 

இந்த நிலையில், பிரஷாந்தை வைத்து கௌதம் மேனன் படமெடுக்கவுள்ளார்.

கௌதம் மேனன் இயக்கி திரைக்கு வராமல் கிடப்பில் கிடந்த ‛எனை நோக்கிப் பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம்' படங்களை வெளியிடும் வேலைகள் தொடங்கி விட்டதால், இது நிறைவு பெற பிரஷாந் படத்தை இயக்கவுள்ளார்.

பிரஷாந்தை மீண்டும் வெற்றிப்பட நாயகனாக்கி விட வேண்டும் என்று அவரது தந்தையான தியாகராஜன், ஹிந்தியில் வெளியான தேசிய விருது பெற்ற ‛அந்தாதுன்' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். 

இந்த படத்தை ஒரு முன்னணி இயக்குநர் இயக்குவார் என ஏற்கனவே அவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது கவுதம் மேனன் அந்த படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.