பிரபாஸ் ரசிகர் உயிரிழப்பு
நடிகர் பிரபாஸ் படத்துக்கு பனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி இரசிகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்த சாஹோ ப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
பாகுபலி படத்துக்கு பின்னர் இந்தப் படம் வெளியாவதால் திரையரங்குகளில் பிரபாஸ் இரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் என்று கொண்டாடி வருகிறார்கள்.
இரசிகர்கள் கொண்டாட இரவு 1 மணிக்கே காட்சி போடலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில், தெலுங்கானாவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பிரபாஸின் ரசிகர் பேனர் கட்டிய போது மின்சாரம் பாய்ந்ததில் தியேட்டர் கட்டடத்தில் இருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment