பிக்பாஸ் கவினின் தாய்க்கு சிறை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள, கவினின் தாய்க்கு, சீட்டு கம்பெனி மோசடி வழக்கில், ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, பகுதியைச் சேர்ந்த அருணகிரி-தமயந்தி, இவர்களின் மகன், சொர்ணராஜன். இவரது மனைவி, ராணி, அருணகிரியின் மகள், ராஜலட்சுமி.
இவர்கள், ஐவரும் சேர்ந்து, கே.கே.நகர் பகுதியில், 1998 முதல், 2006 வரை, அனுமதியின்றி, சீட்டு கம்பெனி நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் சீட்டுக் கட்டிய பலருக்கு பணம் தரவில்லை. பாதிக்கப்பட்டோர் அளித்த முறைப்பாட்டின்படி, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு பொலிஸார், வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை, திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின்போதே, அருணகிரியும், அவரது மகன், சொர்ணராஜனும் இறந்து விட்டனர்.
இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி கிருபாகரன், நேற்று தீர்ப்பளித்தார்.
மோசடியில் ஈடுபட்ட தமயந்தி, ராஜலட்சுமி, ராணி ஆகிய மூவருக்கும், தலா, ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். ஏமாந்த, 29 பேருக்கு, தலா, 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், உத்தரவிட்டார்.
இதில், ராஜலட்சுமி, பிக்பாஸ் எனும் தனியார், டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள, கவினின் தாயார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவர், பொலிஸ் துறையில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.
Post a Comment