பணிவைக் கற்றுக்கொண்ட பிரபாஸ்
ரஜினி, சிரஞ்சீவி போன்ற மிகப்பெரிய சாதனையாளர்களிடமிருந்து பணிவை கற்றுக்கொண்டு என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன். இவ்வாறு தெரிவித்துள்ளார். நடிகர் பிரபாஸ்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
பாகுபலி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று என்னை உலகமெங்கிலும் கொண்டு சேர்த்தது. ஆனால் அந்த வெற்றியை நான் என் தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை.
ரஜினி, சிரஞ்சீவி போன்ற மிகப்பெரிய சாதனையாளர்களிடமிருந்து பணிவை கற்றுக்கொண்டு என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன்.
இன்னும் எத்தனை வெற்றிகளை சந்தித்தாலும் அவர்களைப் போலவே நான் அமைதியாகவே இருப்பேன்-என்றார்.
பிரபாஸ் நடித்துள்ள மெகா படம் சாஹோ எதிர்வரும் 30 ஆம் திகதி உலகமெங்கிலும் பிரமாண்டமாக வெளியாகிறது.
Post a Comment