AD

அப்பாவின் கல்லறைதான் எனக்கும்

கடலோரக் கவிதைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ரேகா  மீண்டும் குணச்சித்ர நடிகையாக படங்களில் நடித்து வருகிறார்.  

இவர் அண்மையில் பேட் ஒன்று அளித்துள்ளார். அவர் தெரிவித்தாவது,

நான் நடித்திருக்கும் பல படங்களை பலரும் பார்த்திருக்கின்றனர். ஆனால், என்னுடைய அப்பா, நான் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டும்தான் பார்த்தார். 

நான் சினிமா பக்கம் போனது அவருக்கு, துளிகூடப் பிடிக்கவில்லை. கடைசி வரை அதே எண்ணத்திலேயேதான் இருந்தார்.

ஆனால், அவர் என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். நானும், அவர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்தேன். அதன் வடிவாக, கீழ்பாக்கத்தில் அவருக்குக் கல்லறை எழுப்பினேன்.

எங்கப்பாவின் கல்லறை இருக்கும் இடத்தில் வேறு யாரையும் அடக்கம் செய்ய வேண்டாம் எனக் கேட்டிருக்கிறேன். என்னுடைய மறைவுக்குப் பின், அப்பா பக்கத்தில் தான் என்னுடைய உடலையும் அடக்கம் செய்ய வேண்டும் என கேட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளேன் என்றார்.