AD

தமிழில் ஆர்வம் காட்டும் பிரபாஸ்

தமிழ்ப் படத்தில் நடிக்க விருப்பமாக இருக்கிறேன் நல்ல ஒரு கதைக்காக காத்திருக்கிறேன்-இவ்வாறு தெரிவித்துள்ளார் தெலுங்கு நடிகர் பிரபாஸ்.

'சாஹோ' படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிக்காக நேற்று சென்னை வந்திருந்த அவர் பத்திரிகையாளர் சந்திப்பின்போதே இதனைப் பேசியுள்ளார்.

நான் சென்னையில் பிறந்தவன், 'பாகுபலி, சாஹோ' படங்கள் தமிழிலும் எடுக்கப்பட்டவை என்று அவர்கள் சொன்னாலும் அவை நேரடி தமிழ்ப் படங்கள் அல்ல. பெரும்பாலான காட்சிகள் தெலுங்கில்தான் எடுக்கப்பட்டன.
நேரடித் தமிழ் படத்தில் நடிக்க விருப்பமாக உள்ளேன்.-என்றார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு தமிழிலேயே பதிலளித்தார் பிரபாஸ். 

அவர் தமிழில் பேசியதை தெலுங்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.