AD

ஜோதிகாவுக்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் நாத்தனார்

சிவக்குமார் குடும்பத்தில் சூர்யா, கார்த்தி நடிகராக உள்ளனர். மகள் பிருந்தா சிறுவயதிலேயே பாடகியாக உள்ளார். திருமணத்திற்க பிறகு பாடுவதில் ஆர்வம் காட்டாத பிருந்தா, தற்போது மீண்டும் பாட துவங்கி உள்ளார். 

ஜோதிகா நடித்த ‛காற்றின் மொழி', ‛ராட்சசி' படங்களில் ஒரு பாடல் பாடினார். தற்போது ஜோதிகா நடிப்பில் வெளியாக உள்ள ஜாக்பாட் படத்தில் சென்னை தமிழில் ஒரு குத்துப் பாடல் பாடியிருக்கிறார். 

ஜாக்பாட் இசை வெளியீட்டு விழாவில் பிருந்தா பேசும்போது, ஏற்கனவே சில பாடல்கள் ஜோதிகா அண்ணிக்கு பாடி இருக்கிறேன். ஜாக்பாட் பாடலில் வரும் பேஜார் போன்ற சில வரிகள் புதிய அனுபவத்தைக் கொடுத்தது என்றார். 

ஜோதிகா பேசும்போது, எனக்கு பிருந்தா லக்கியானவர். எனது எல்லா படங்களிலும் அவர் ஒரு பாடல் பாட வேண்டும் என்றார்.