AD

சந்தானம் படத்தை தடை செய்ய கோரி புகார்

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஏ1. ஜான்சன் இயக்கி உள்ளார். நாயகியாக தாரா நடிக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில் சில காட்சிகள் பிராமணர் சமூகத்தினரை இழிவுப்படுத்தும் வகையிலான வசனங்கள் உள்ளன. இதனால் ஏ1 படத்தை தடை செய்ய வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் ராம ரவிக்குமார். ஹிந்து தமிழர் கட்சி தலைவரான அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்: சந்தானம் நடிப்பில் அக்யூஸ்ட் நம்பர் என்பதை குறிக்கும் வகையில் ஏ1 என்ற படம், பிராமணர் சமூகத்தினரை இழிவுப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ள நிலையில் வீணாக ஒரு பிரச்னையை ஏற்படுத்த இப்படத்தைஎடுத்துள்ளனர். ஆப்பாயில் சாப்பிட்டு தன் காதலை வெளிப்படுத்தும் அக்ரஹாரத்து மாமி என்றெல்லாம் படத்தில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இப்படத்தை வரும் 27ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கு தடை விதிக்க வேண்டும்.நடிகர் சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.