AD

தண்ணீருக்கு இப்படிச் செய்யுங்கள் - ரஜினி

மழை வருவதற்கு முன்பே ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இந்த பணிகள் எல்லாம் போர்க்கால அடிப்படையில் நடக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு நேற்று நள்ளிரவு சென்னைக்குத் திரும்பினார். அங்கு  விமான நிலையத்தில் அளித்த பேட்டியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, 

குடிநீர் பிரச்சினையில் தவிக்கும் மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ள எனது ரசிகர்களை மிகவும் பாராட்டுகிறேன். அவர்கள் செய்வது மிகவும் நல்ல விடயம். நாங்கள் செய்யும் நல்ல விஷயங்கள் இப்போதுதான் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. 

பாரதிய ஜனதா அரசு இப்போதான் பதவியேற்றுள்ளது. அது நிச்சயம் நதி நீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றும் என்று நம்புகிறேன். நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க முடியாதது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏதோ தவறு நடந்திருக்கிறது. என்றார்.


#Rajinikanth #cinesamugam