AD

குஷ்பு - காயத்ரி ரகுராம் மோதல்

 நாட்டு நடப்புகள் குறித்து நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் நடிகை குஷ்புவும்
அடிக்கடி டுவிட்டரில் மோதிக் கொள்வார்கள். இருவரும் இந்த முறை கொஞ்சம் ஓவராகத்தான் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்தில் 22 வயது இளைஞர் ஒருவரை, ஒரு சிலர் பிடித்து வைத்துக் கொண்டு ஜெய்ஸ்ரீ ராம் என்று கோஷமிடுமாறு அடித்து துன்புறத்திய காட்சி இணையதளத்தில் வெளியானது. 

பின்னர் அந்த இளைஞர் இறந்து விட்டார். இந்த வீடியோ குறித்துதான் தற்போது, இருவரும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த வீடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்ட குஷ்பு, "ஜெய்ஸ்ரீராம் என்று சொல்ல சொல்லி ஒரு இளைஞரைக் கொன்று விட்டனர் இதுதான் இந்தியாவா?" என்று கேட்டிருந்தார். 

இதற்கு பதில் அளித்த காயத்ரி ரகுராம், "இந்துக்களை கொலைகாரர்களாக சித்தரிப்பது இப்போது டிரண்டாகி விட்டது. மற்ற மதத்தினர் தவறு செய்யும்போது குஷ்பு வாய்திறப்பதில்லையே ஏன்?" என்று தனது டுவிட்டரில் பதிவிட்டார்.

இதற்குப் பதில் அளித்துள்ள குஷ்பு, “உங்களைப் போன்றவர்களுடன் விவாதம் செய்ய நான் தயாராக இல்லை. உங்கள் உறவினர்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன். எனவே வாயை மூடிக்கொண்டு இருக்கவும்” என்றார். 

இதற்கு மீண்டும் பதில் அளித்த காயத்ரி ரகுராம், “நீங்கள் என் மதத்தை இழிவு செய்தால் நான் சும்மா இருக்க மாட்டேன். மரியாதையாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். தனிப்பட்ட முறையில் உங்கள் மீது பகை இல்லை” என்றார்.



#GayathriRaguram #cinesamugam #Kushboo