AD

நடிகை டாப்சிக்கு என்னாச்சு..ரசிகர்கள் பிராத்தனை..!!

நீண்ட இடைவெளிக்குப் பின், தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரான கேம் ஓவர் படத்தில் நடித்திருக்கிறார் டாப்சி. அந்தப் படத்தில் இவருடைய கேரக்டர் மிகவும் முக்கியமானது என, படக் குழுவினர் சொல்கின்றனர். வரும் 14ல் ரிலீசாகவிருக்கும் இந்தப் படத்துக்காக, ப்ரமோஷன் வேலைகள் வேகமாக நடக்கின்றன.
இதற்காக நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பிற்கு நடிகை டாப்சியும், மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தார்.ஒரு நிருபர், நீங்கள்தான், தற்போது பட உலகின் லேடி சூப்பர் ஸ்டாரா? என கேட்டு வைத்தார். அதற்கு சீரியசாக பதில் அளித்தார் டாப்சி. அப்படியெல்லாம் மிக கூடுதலான உயரத்துக்கு என்னை கொண்டு சென்று விடாதீர்கள்.

ஒரு படத்துக்கு நான் மூன்று கோடி ரூபாய்தான் வாங்குகிறேன். என்னை விட இரு மடங்கு அதிகமாக ஆறு கோடி ரூபாய் வாங்கும் நடிகை நயன்தாரா தான் உண்மையிலேயே லேடி சூப்பர் ஸ்டார். அவர் அளவுக்கு நான் வர வேண்டும் என்றால், நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்றார்.
அதன் பிறகு இவர் தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் கைகளின் தீ காயங்களுடன் ஒரு புகைபடத்தை பதிவு செய்துள்ளார். அதில் Yes yes, chiffon sarees in snow capped mountains for 25 days would’ve been tougher... so I chose all this 🤷🏻‍♀️
#GameOver #ActorsLife என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் "Get well soon" என்று பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
#TaapseePannu #Latestnews #Tamilcinemaking