தேர்தலை நடத்தவிடவே மாட்டேன் ராதாரவி..!!
நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியில் 9 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் செய்திருக்கிறார்கள். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. எனவே தேர்தல் நடக்க வாய்ப்பே இல்லை’ என்று மீண்டும் அடித்துக்கூறுகிறார் சமீபத்தில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்ட நடிகர் ராதாரவி.
பாண்டவர் அணி இதுவரை திரட்டிய நிதிகளில் ரூபாய் 9 கோடி வரை மோசடி செய்திருக்கிறது. அதே அணியைச் சேர்ந்த நடிகர் கருணாஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் 7 கோடி ரூபாய் வாங்கிவிட்டு அரசியல் ரீதியாக ஏமாற்றியுள்ளார். இப்படி ஏமாற்றுப் பேர்வழியான இவர் எப்படி நடிகர் சங்கத்துக்கு நன்மை செய்யய முடியும்.
நலிவடைந்தவர்களுக்கு உதவுவதாகக் கூறி நாசர்,விஷால், கருணாஸ் போன்றவர்கள் மட்டுமே வளமடைந்திருக்கிறார்கள். நடிகர் சங்கத்தில் ஓட்டுப்போடும் தகுதியை எனக்கு இல்லாமல் செய்திருக்கிறார்கள். அது ரத்தாகும் வரை நடிகர் சங்கத் தேர்தலை நடத்தவிடவே மாட்டேன்’என்று உறுதியாகக் கூறுகிறார் ராதாரவி.
#Radharavi #Vishal #Karunash #Latestnews #Tamilcinemaking
Post a Comment