AD

பாலாவுக்கு வந்த சோதனை..!!

சமீபகாலமாக தனக்குக் கிடைக்கும் ரெஸ்பான்ஸ் குறித்து அப்செட் ஆகியிருக்கிறாராம் இயக்குநர் பாலா.

கடைசியாக அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப்படத்தின் தமிழ் மொழி ரீமேக்கை இயக்கினார் பாலா. ‘வர்மா’ என்ற பெயரில் உருவான இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.அப்படம் முழுமையாக முடிந்த பின்னர், தயாரிப்பாளருக்கும் பாலாவுக்கும் ஏற்பட்ட, இதுவரை யாருமே கண்டுபிடிக்க முடியாத, கருத்து வேறுபாடு காரணமாக படமே கைவிடப்பட்டது.
கொஞ்சம் ஆட்டம் கண்டவர் மீண்டு வருவதற்காக அடுத்து இரண்டு நாயகர்கள் நடிக்கும் கதை ஒன்றை தயார் செய்திருக்கிறாராம் பாலா.அதில் நடிக்க ஆர்யா மற்றும் அதர்வா இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் .பாலா இயக்கத்தில் ‘நான் கடவுள்’, ‘அவன் இவன்’ படங்களில் ஆர்யாவும், ‘பரதேசி’ படத்தில் அதர்வாவும் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இருவரையும் ஒரே படத்தில் இணைந்து இயக்கவுள்ளார் என்று சொல்லப்பட்டது.
இப்படத்திற்கு அதர்வா உடனே ஓ.கே சொல்ல, ஆர்யா மட்டும் சில மாதங்களாக இழுத்தடித்து விட்டு தற்போது இன்னும் இரண்டு வருடங்களுக்கு கால்ஷீட் இல்லை என்று மறுத்துவிட்டாராம். அடுத்து சூர்யாவை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளார் பாலா.

#Arya #Atharva #Bala #Kollywoodnews #Latestnews #Tamilcinemaking