AD

அட ... இப்படியும் ஒரு நடிகையா

நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். இவ்வளவு பெரிய நடிகையாக ஆனபிறகும் ஆடம்பரத்துக்கு ஆசைப்படவில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் நடிகை டாப்சி.

சிறுவயதில் இருந்தே நேரத்தின் முக்கியத்துவம் தெரியும். அதை எப்போதும் வீணாக்கியது இல்லை. சிக்கனமாக செலவு செய்கிறேன். வரவு செலவு கணக்கையும் எழுதி வைத்துள்ளேன். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அளித்த பேட்டி ஒன்றின்போதே டாப்சி இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, 

30 வயதை அடைவதற்கு முன்னால் சொந்தமாக வீடு, கார் வாங்க வேண்டும். நிரந்தரமாக ஒரு தொழில் இருக்க வேண்டும் என்பது இலட்சியமாக இருந்தது. அதனால்தான் எனது தந்தையை சம்மதிக்க வைத்து சினிமாவுக்கு வந்தேன். 

இப்போது எனது கனவு நிறைவேறி இருக்கிறது. விலை மதிப்பில்லா மும்பை பகுதியில் அதிக விலையில் சொந்தமாக வீடும், பி.எம்.டபுள்யூ காரும் வாங்கி இருக்கிறேன்.

வெற்றியை விட அதிக தோல்விகளை சந்தித்து இருக்கிறேன். ஆனாலும் ஏன் சினிமா தொழிலுக்கு வந்தோம் என்று நினைத்தது இல்லை. நான்கு  சுவர்களுக்குள் காலை முதல் மாலை வரை வேலை செய்வது பிடிக்காது. அதனால்தான் நடிகையானேன். இதன்மூலம் பல்வேறு இடங்களுக்குச் செல்ல முடிகிறது.

இந்தியா முழுவதும் பிரபலமாகவும் இருக்கிறேன். இதை விட என்ன வேண்டும். சிறுவயதில் இருந்தே எனக்கு தோழிகள் அதிகம். அவர்களுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன்-என்றார்.


#tapsee #tamilcinemaking