AD

மகள் இறந்தது எப்படி? அன்று நடந்ததை விளக்கிய நடிகர்


இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரதிஷ் வோராவின் 2 வயது மகள் பிளாஸ்டிக் பொம்மையை விழுங்கி மூச்சு திணறி அண்மையில் உயிர் இழந்தார். இதையடுத்து குழந்தையின் உடல் மும்பையில் இருந்து 
ராஜ்கோட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. தனது 2 வயது மகள் இறந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்  பிரதிஷ் வோரா. 

அதில் கூறியிருப்பது: என் மனைவியும், மகளும் ராஜ்கோட்டில் வசித்து வருகின்றனர். நான் மட்டும் தான் மும்பையில் தங்கி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறேன். இந்நிலையில் விடுமுறைக்காக அவர்கள் மும்பைக்கு வந்தனர். கடந்த 10 நாட்களாக அவர்கள் மும்பையில் இருந்தனர்.

கடந்த 7ம் தேதி இரவு நண்பர்கள் வீட்டிற்கு வந்தனர். நாங்கள் அனைவரும் பீட்சா சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். என் மகள் பொம்மையில் உள்ள சின்ன பிளாஸ்டிக் கியூபை விழுங்கி விட்டார். அதை பார்த்த நான் உடனே அதை வெளியே எடுக்க அவரின் வாயில் கையை விட்டேன். ஆனால் அவர் என்னை கடித்துவிட்டார். என் மகள் என்னை வலுவாக கடித்ததுடன் வாயில் இருந்து பொம்மையை எடுக்க ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதனால் என்னால் அந்த பொம்மையை வெளியே எடுக்க முடியவில்லை. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு நிலைமை சீரானது. பிறகு இரவு 1 மணி அளவில் என் மகளின் நிலைமை மோசமாகி உயிர் இழந்துவிட்டார்.

என் மனைவியை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு என்னுடையது. அவர் தைரியமானவர். இந்த துக்கத்தில் இருந்து அவர் தான் முதலில் வெளியே வருவார். அவர் ஏற்கனவே வேலைக்கு செல்லத் துவங்கிவிட்டார். நான் இன்னும் சில நாட்கள் ராஜ்கோட்டில் இருந்துவிட்டு பின்னர் மும்பை செல்வேன். எங்கள் மகள் பிறந்த பிறகே எனக்கும், மனைவிக்கும் வேலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் இறந்துவிட்டாலும் எங்களுடன் இருப்பது போன்றே உள்ளது என்கிறார் பிரதிஷ்.
#Tamilcinemaking