AD

மீண்டும் வில்லனாகும் பிரசன்னா

`அஞ்சாதே' படத்தில் வில்லத்தனமாக  நடித்த பிரசன்னா, தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் மீண்டும் வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கய `நரகாசூரன்'  பணப் பிரச்சனையால்  வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக `நாடக மேடை' என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். அந்த படம் பாதியில் நிற்கிறது. 

இந்த நிலையில், அவரது அடுத்த படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கிறார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரசன்னாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. 

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கவிருக்கும் நிலையில், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


#prasanna  #Arun_Vijay  #Karthick_Naren