AD

நான் திருமணம் செய்தவர் நீ இல்லை மாறிவிட்டாய்..


2011ம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களிற்கு ஆர்யன் என்கிற மகன் உள்ளார்.  இந்நிலையில் தற்போது அவர்கள் பிரிந்துவிட்டனர்.   இவ் விடயத்தினை விஷ்ணு விஷால் ட்விட்டரில்  தெரிவித்தபோது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் விவாகரத்து குறித்து விஷ்ணு விஷால் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

‘எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்பதை என்னால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. வாழ்க்கையில் எதுவும் நிலை இல்லை என்பதை இப்பொழுது புரிந்து கொண்டுள்ளேன். என் வாழ்வில் மிக சரியான விஷயம் எது என்றால் அது என் திருமணம் என்று நினைத்தேன். ஆனால் அது இப்பொழுது நிலைக்காமல் போய்விட்டது.

திரையில் ரொமான்ஸ் காட்சிகள் நன்றாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகைகளுடன் நன்றாக பேசினேன். அங்கு தான் பிரச்சனை ஆரம்பித்தது. நீ முன்பு போன்று இல்லை, மாறிவிட்டாய். நான் திருமணம் செய்தவர் நீ இல்லை என்று பிரச்சனை தொடங்கியது. இதன் பின் நாங்கள் பிரிந்துவிட்டோம். யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. நான் ரஜினியை பிரிந்தாலும் அவருடன் நட்பாகவே உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

 #Vishnuvishal #Vishnu #Vishnuvishalrajini #Tamilcinemaking