AD

மகன் வரைந்த ஓவியத்தை பதிவிட்ட செளந்தர்யா

ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா  தனது மகன் வேத் மீது அதிக அக்கறையும், அன்பும், பாசமும் கொண்டவர்.

இன்றைக்கு தொழில்நுட்பத்தினால் சிறுவர் சிறுமிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைப்பற்றி பெரும்பாலான பெற்றோர்கள் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.

ஆனால் செளந்தர்யா அப்படியல்ல. தனது மகனிடம் மொபைல் போன்ற தொழில்நுட்பத்தை கொடுப்பதைத் தவிர்த்து மகனுக்கு மணல் ஓவியம் வரைவது மற்றும் பெயிண்டிங் செய்ய பயிற்சி கொடுத்து வருகிறார். 

அப்படி தனது மகன் வேத் வரைந்த அழகிய வீடு ஒன்றையும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் செளந்தர்யா.


#Rajinikanth #Soundarya  #tamilcinema