14 இல் நயனின் கொலையுதிர் காலம்
"மிஸ்டர்.லோக்கல்' படத்தையடுத்து, நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `கொலையுதிர் காலம்' படம் திரைக்கு வரவிருக்கிறது.
எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்தப் படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழும் வழங்கியுள்ளது.
வி.மதியழகன் தயாரித்த இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
#Kolaiyuthir_kaalam #Nayanthara #tamilcinemaking
Post a Comment