AD

14 இல் நயனின் கொலையுதிர் காலம்

"மிஸ்டர்.லோக்கல்' படத்தையடுத்து, நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `கொலையுதிர் காலம்' படம் திரைக்கு வரவிருக்கிறது. 

எதிர்வரும்  ஜூன் 14 ஆம் திகதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்தப் படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

படத்திற்கு தணிக்கை குழு  யு/ஏ சான்றிதழும் வழங்கியுள்ளது.

வி.மதியழகன் தயாரித்த இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார். 




#Kolaiyuthir_kaalam  #Nayanthara #tamilcinemaking