AD

திருமணம் செய்வதென்றால் இந்த 3 கண்டிஷென்கள்


தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். தற்போது இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து  ‘என்.ஜி.கே’ என்கிற ‘நந்த கோபாலன் குமார்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மே மாதம் 31ஆம் திகதி இப் படம் வெளிவரவுள்ளது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ரகுல்,  'என்ஜிகே படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது, இரண்டு ஹீரோயின்கள் 
இருந்தாலும்  இருவருக்குமே தேவையான அளவு முக்கியத்துவம் கிடைத்தது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது' என்றார்.

இதைத் தொடர்ந்து தனது வருங்கால கணவர் பற்றி கூறிய ரகுல்  ப்ரீத் சிங், ‘தனது வருங்கால கணவர் 6 அடி  உயரம் இருக்க வேண்டும். உண்மையான மனிதராக இருக்கவேண்டும். வாழ்க்கையில் ஒரு பேஷன் இருக்கணும். இன்னும் நிறைய கண்டிஷன்கள் இருந்தது. என் அண்ணன்  கிண்டல் செய்ததால் குறைத்துக் கொண்டேன். நான் நீண்ட நாட்களாகவே சிங்கிளாக 
தான் இருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். ரகுல் ப்ரீத் மற்றும் ராணா ஆகியோர் காதலிப்பதாகத் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், ராணாவும் தானும் நண்பர்களே தவிர காதலர்கள் இல்லை என்று விளக்கம் அளித்திருந்தார்.

#rakulpreet #tamilcinemaking